கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை இந்த வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது

மார்கழி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, அரிசி மாவு, சந்தனம், மஞ்சள், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்ட நந்தி எம்பெருமானுக்கு மலரும் மாலைகள், பல்வேறு வண்ண பூக்கள், எலுமிச்சை, தாமரை உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி, மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது
இதில் இந்த வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Behind News Acham Thavir Nenjam Nimir