விருதுநகரில் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினையொட்டிய மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக திமுக சார்பில் பல்வேறு போட்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு ஏற்பாட்டில் …
Read More »செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கரூர் மாவட்ட பாமக செயலாளர் கொங்கு பிரேம்நாத் !!
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 2-வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாவட்ட செயலாளர் தேவி தலைமையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதில் …
Read More »அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சார்பில் எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கரிகாலன் விருப்பமனு தாக்கல்
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் 2026 வர இருப்பதை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் விவரங்களையறிய தொண்டர்களிடையே விருப்ப மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணியின் இணை செயலாளர் வழக்கறிஞர் கரிகாலன் தனது விருப்ப மனுவினை அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான …
Read More »ஆற்காடு தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த டாக்டர் ஜோதிகுமார் | அதிமுக வினர் உற்சாகம் !!
ஆற்காடு தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர் டாக்டர் ஜோதிக்குமார் விருப்ப மனுவினை அக்கட்சித்தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்தார் தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போதைய நிலையில் மும்முனை போட்டியா ? நான்குமுனை போட்டியா ? என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வரும் …
Read More »கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை இந்த வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது மார்கழி மாத தேய்பிறை …
Read More »கரூரில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் முன்னிலையில் மாற்று கட்சியினர், பொதுமக்கள் என சுமார் 400 பேர் இணைப்பு விழா
கரூர்.. கரூரில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் முன்னிலையில் மாற்று கட்சியினர், பொதுமக்கள் என சுமார் 400 பேர் இணைப்பு விழா – 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் மற்றும் மாற்றுக் கட்சியினர் 200 பேர் என மொத்தம் 400 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் …
Read More »பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ‘விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு’: மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கரூர், டிசம்பர் 15: கரூர் பரணி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டுதல் மையம் (Career Guidance Centre) சார்பில், இன்று “விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு” (Meet The Scientist) என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கான்பூரிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR – CLRI) விஞ்ஞானி முனைவர் ஜெய பிரகாஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் …
Read More »அதிமுக அமைச்சரவையில் பழனியப்பன் தான் பொறுப்பாக பேசுவார் ! தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பெருமிதம் !!!
அதிமுக அமைச்சரவையில் எந்த ஊரு அமைச்சரும் பொறுப்பாக பேசியது கிடையாது : பழனியப்பன் என்கிற ஒரே ஒரு அமைச்சரைத் தவிர, பழனியப்பன் குறித்து அவருடைய இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பெருமிதம். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் இல்ல திருமண விழா நடைபெற்றது. மணமக்கள் எழில் மறவன் கிருத்திகா ஆகியோரை வாழ்த்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்வில் கூட்டணி …
Read More »ஜாக்டோ ஜியோ சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம்…
தேர்தல் வாக்குறுதி படி ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், உட்பட பலர் தலைமை வகித்தனர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ரக்க்ஷித், துவக்க உரையாற்றினார். தமிழக தொடக்கப்பள்ளி …
Read More »பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் தரக்குறைவாக திட்டியதால், நஞ்சப்பா அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மிகவும் பழமையான பள்ளி என்பதால் திருப்பூர் மாநகரின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பேருந்து மூலம் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விரைவில் …
Read More »
Behind News Acham Thavir Nenjam Nimir